” கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சியமைக்கும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொழும்பு மாநகரசபையில் கூடுதல் இடங்கள் தேசிய மக்கள் சக்திக்கே வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சியமைப்பதற்குரிய தார்மீக உரிமை எமக்குள்ளது.
எந்தவொரு உறுப்பினரையும் நாம் விலை கொடுத்து வாங்கவில்லை. அதேபோல எமக்கு அதிக இடங்கள் கிடைக்காத இடங்களில் ஆட்சியமைக்கவும் நாம் முற்படவில்லை. 50 சதவீதம் வாக்கு கிடைக்காத சபைகளிலும் கூடுதல் இடங்கள் கிடைத்த சபைகளிலேயே ஆட்சியமைக்க முயல்கின்றோம்.
கொழும்பு மாநகரசபை பற்றி கவலைப்பட வேண்டாம். அதில் நாம் ஆட்சியமைப்போம்” – என்றார்.