கொழும்பில் நாளை நீர்வெட்டு!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (10)  காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles