‘கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் 117,955 பேருக்கு கொரோனா’

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 56  ஆயிரத்து 464 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 40 ஆயிரத்து 788 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 703 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 528 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 561 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 313 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles