கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பிற்காக புதிய பொலிஸ் நிலையமொன்று இன்று (6) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது துறைமுக பொலிஸ் துணை நிலையமாக பராமரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அவர்களினால் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
