கொழும்பு புத்தக கண்காட்சியில் பங்கேற்றவருக்கு கொரோனா! நுவரெலியாவுக்கும் சுற்றுலா வந்துள்ளார்!!

கொழும்பு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிடவந்த சிலாபத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதியே இவர் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளார் எனவும், செப்டம்பர் 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கும் சுற்றுலாச்சென்றுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. சிலாபம் ஆராய்ச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles