உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபையையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், நிராகரிப்பு இன்றி தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுக்களை எல்லா இடங்களிலும் தாக்கல் செய்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
