நாட்டில் நேற்று 628 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 26 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.