கொவிட் தொற்றால் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

புத்தளம் – நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குறித்த பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த மாணவியொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பியபோது குறித்த மாணவிக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்டிருந்ததன் காரணமாக அவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தப்போவ பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவியொருவராவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு பிசிஆர் பரிசோதனைகளுக்கமைய, அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Articles

Latest Articles