‘கோட்டாவின் கூட்டத்துக்கு செல்லாத மைத்திரி, விமல்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரப்பிரச்சினை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 52 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தம்மால் பங்கேற்கமுடியாததற்கான காரணத்தை இவர்கள் ஆளுந்தரப்புக்கு ஏற்கனவே அறிவித்துள்ளனர் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles