கோட்டா பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி. வலியுறுத்து

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், அவரை பாதுகாப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. ஜனாதிபதி பதவி விலகியே ஆக வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை கொள்ளையடித்தார் என்றுதான் ஜனாதிபதி தேர்தலின்போது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அப்படியான ஒருவரை ஜனாதிபதி நம்புவது எந்த அடிப்படையில்? எனவே , ராஜபக்சக்கள் ரணில் ஊடாக தமது பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். எனவே, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி விலகியே ஆகவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles