சஜித்தின் கோரிக்கை ‘அவுட்’ – இன்று மாலை பிரதமராகிறார் ரணில்!

தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது.

இதனால் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

” பிரதமராக பதவி ஏற்குமாறு நான் அழைப்பு விடுத்தேன். இரு நாட்கள் எவரும் முன்வரவில்லை. அதனை ரணில் ஏற்றார். அவருக்கு வழங்கிய உறுதிமொழியை மீறமுடியாது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், அதனை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவும்.” என எதிர்க்கட்சித் தலைவரிடம், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles