சஜித்தின் சகாக்கள் ரணிலின் மேடையில்!

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

காலியில் நடைபெற்றுவரும் “ ஒன்றிணைந்து வெல்வோம் – காலியில் நாம் ” பொது கூட்டத்ததொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார், அவர் ஓடிவிடுவார் என சிலர் பிரசாரம் செய்தனர். ஆனால் அவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார். வேட்பாளராகவே இந்த மேடையில் அமர்ந்துள்ளார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றிபெறுவார் என்பது உறுதி. அவர் பின்னால்தான் அனைத்து கட்சிகளும் இன்றுள்ளன.

நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்காத சஜித் பிரேமதாச வெற்றிவேட்பாளரா? இல்லை. நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் எமது மேடையிலேயே இருக்கின்றார். அடுத்துவரும் நாட்களில் சஜித்தின் சகாக்களும் எமது மேடையில் ஏறுவார்கள்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles