சஜித் தலைமையில் மெகா கூட்டணி 08 ஆம் திகதி உதயம்!

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இணைவுடன் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி மலரவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன எனவும், ஆகஸ்ட் 08 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே டலஸ் அழகப்பெரும, சரதி ஹேரத் உள்ளிட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும் தமது அமைப்பு சகிதம் இக்கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் பிரிதொரு சந்தர்ப்பத்திலேயே சஜித் தரப்புடன் இணைவார் என தெரியவருகின்றது.

 

Related Articles

Latest Articles