சத்தான உணவின்றி நோய்வாய்ப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! – வைத்தியர் தீபால்

கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை என்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 100 பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பாடசாலைகள் மூடப்பட்டதால், சரியான சத்தான உணவு கிடைக்காததுடன், குழந்தைகளின் மனநிலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு சிற்றுண்டி, இனிப்பு பானங்கள் வழங்காமல் சத்தான உணவுகளை வழங்க பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

சிறார்களை இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து காப்பாற்றாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களின் மூளை வளர்ச்சி குறைந்து அவர்களின் புத்திசாலித்தனம் குறையும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles