பேக்கரிப் பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரித் தொழிலில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (SMSBOA) தெரிவித்துள்ளது.
பலவிதமான பேக்கரி பொருட்களின் விலையேற்றத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக AMABOA தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் இன்னும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் மலிவான மாவு தரமற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.