சமூக ஊடகங்களில் கலக்கும் Rj Chandru

இலங்கையின் பிரபல முன்னனி வானொலி அறிவிப்பாளராக திகழ்ந்த Rj சந்துரு, தற்போது சமூக வலைத்தளத்தில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியொன்றில் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையாற்றி வந்த சந்துரு, தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அதன்பின்னர் சமூக ஊடகங்களில் தனது கவனத்தை திரும்பி, ஊடகப் பணிகளையும் படைப்புக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். பெரும்பாலான படைப்புக்கள் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு அவரது படைப்புக்கள் வௌிவர ஆரம்பித்துள்ளன.

சந்துருவின் படைப்புக்கள் உள்நாட்டில் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏராளமான நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிரேம், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை ஆரம்பித்து, தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

நவீன ஊடகம் என அழைக்கப்படும் சமூக ஊடகங்களின் ஊடாக தனது வருமான வழியையும் அமைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சந்துரு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வானொலிக்குள் மீண்டும் பிரவேசிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது அதற்கான வாய்ப்பில்லை என மறுத்துவிட்டார்.

இனி ஊடகப் பணி சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தமது பணியை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் வானொலியொன்றுக்குள் பிரவேசிக்க எவ்வித எண்ணமும் இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles