சர்ச்சைக்குரிய உளவு புறாவை விடுவித்தது இந்தியா

சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் பொலிஸாரால் குறித்த புறா பிடிக்கப்பட்டது.

புறாவின் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் ஒன்று செம்பு மற்றும் மற்றொன்று அலுமினியம் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதன் இரு இறக்கைகளுக்கும் கீழே, சீன மொழியைப் போன்ற மொழியில் தகவல் எழுதப்பட்டிருந்தது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணையில், அது உளவு புறா அல்லவெனவும், தைவானில் திறந்த நீர் பந்தயத்தில் பங்கேற்ற புறா என்பதும் தெரியவந்தது. வழிமாறி இந்த புறா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்துள்ளது.

உடல்நலன் சோதனையின் பின்னர் குறித்த புறா நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles