சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 4 சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளை நீக்கிவிட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாத்திரம் 20 ஐ நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
