இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்துள்ளார்.
இதன்போதே அவரை இலங்கைக்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.