மஸ்கெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஆத்தடி பிள்ளையார் ஆலயம் நேற்று (27 ) இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு ஆலய உண்டியல் களவாடப்பட்டுள்ளது .
இது தொடர்பில் ஆலய நிர்வாக சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(ஞானராஜ்)