சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் இன்று காலை காலமானார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த அவர், 1985 ஆம் ஆண்டு முதல் உதயன் நாளிதலின் பிரதம ஆசிரியராக செயற்பட்டுவந்தார்.

இறுதி மூச்சு இருக்கும்வரை ஊடகப்பணியில் ஈடுபட்டார். போர் காலத்திலும் – நெருக்கடியான – சூழ்நிலைகளில் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் எழுத்தாயுதம் ஏந்தி நீதிக்காக போராடினார். இதற்காக சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.

அவரின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

Related Articles

Latest Articles