சிரேஷ்ட தொழிற்சங்கவாதி பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அமரர் ரட்ணசாமியின் மறைவைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1970 ஆண்டு முதல் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து பல்வேறு பதவிகளை வகித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து செயற்பட்ட செயல் வீரனாவார்.

மஸ்கெலியா ,பியவுன்ஸ்வீக் தோட்ட எமிலினா( பால்காமம்) பிரிவின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவராக எழுபதுகளில் செயல்பட்டவர். அதன் பின்பு மஸ்கெலியா மாவட்டத் தலைவராக சேவையாற்றினார்.

1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்பு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளராகவும் உப தலைவராகவும் பலமுறை தெரிவுசெய்யப்பட்டார். இவர் உதவி நிதிச் செயலாளராகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.

இறுதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவராக பொறுப்பு வகித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டவர்.

தொழிலாளர் தேசிய சங்கத்திற்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

வயது முதிர்ந்திருந்தாலும் கம்பீரமாகவும் தைரியமாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர். மஸ்கெலியா பிரதேசத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்காக மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டவர்.

அன்னாரின் திடீர் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles