சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 6,063 முறைப்பாடுகள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு  2020 ஜனவரி முதல் செப்டம்பர்வரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (6) தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. கலாநிதி ஹரினி அமரசூரியவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகளில் 3 ஆயிரத்து 900 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. இவற்றில் 330 முறைப்பாடுகள் தொடர்பிலேயே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles