சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை முதற்தடவையாக அரசின் அனுசரணையோடு நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடாக புனித புத்தர் சிலை மற்றும் புனித பூஜை பொருட்களுடனான பெரஹரா யாத்திரை எதிர்வரும் 27 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சிவனொளிபாத மலை புனித தலத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் பலாபத்வல குருவிட்ட பலாங்கொடை அவிசாவளை ஆகிய வழிகளில் இந்த பெரஹரா ஊர்வலங்கள் கொவிட் சுகாதார கட்டுப்பாடு நடைமுறைகளுடன் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோரது இணைத் தலைமையில் இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சிவனொளிபாத மலை புனித ஸ்தல விகாராதிபதி பெங்கமுவே தம்ம தின்ன தேரோ இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுக்கு மாலனி லொகு போதாகம உட்பட உயர் அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பின்வரும் தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன.
நான்கு ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் பக்தர்களது எண்ணிக்கையை (1 ஊர்வலத்துக்கு 50 பேர் வீதம்) 200 பேருக்கு கட்டுப்படுத்தல், வாகனங்களது எண்ணிக்கையை கட்டுப்படுத்தல், வீதி நெடுகிலும் வழமையாக நடத்தப்படும் பூஜைகளை இம்முறை நடத்தாதிருத்தல், வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளில் கடமையாற்றுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைசெய்தல், ஊர்வல த்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது பிரதேச செயலாளரது அனுமதிச் சான்றிதழ் பெறல், நான்கு வீ திகளிலும் தொற்று நீக்கல், தேசிய மற்றும் மேலைத்தேய வைத்திய உதவி களை வழங்கல் ஆகியனவாகும்.










