சீனாவில் நிலநடுக்கம் – நூற்றுக்கு மேற்பட்டோர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியிலேயே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

இதில், பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்து உள்ளது. அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles