சீரற்ற காலநிலையால் 5000 ரூபா கொடுப்பனவு ‘ஆமை வேகத்தில்’ முன்னெடுப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையல் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தாமதமடையக்கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால், 5 மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் தாமதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவை வழங்கும் உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு திட்டம் செயற்படுத்தப்படுவதாலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், எனவே, 5000 ரூபாவை பெறுவதற்கு தகுதியுடையவர்களுக்கு நிச்சம் அக்கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆகவே, இது விடயத்தில் எவரும் வீண் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles