சீரற்ற காலநிலை காரணமாக 09 வீடுகள் சேதமடைந்துள்ளன

சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,675 ஆக அதிகரித்துள்ளது.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நான்கு மாவட்டங்களில் 387 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மோசமான வானிலை காரணமாக ஒரு வீடு இடிந்துள்ளதுடன் மேலும் 109 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை இலங்கையின் மேற்கு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலைக்குள், இந்த அமைப்பின் தாக்கம் தீவிலிருந்து விலகிச் செல்வதால், நாட்டின் மீதான தாக்கம் குறையும்.

இதேவேளை, நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles