சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு, என்னால் தாய்நாட்டுக்கு அமைப்பு மற்றும் சில அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.எ
சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவை நேற்று அனுப்பி வைத்திருந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த எம்.பிக்களின் பெயர் விவரங்களை ஒப்படைத்தார்,
அத்துடன், சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை பதவி நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.










