” தனிநபரால் நாட்டை நிர்வகிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் இணைந்தால்கூட, மக்களின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்கள் வெற்றியளிக்கும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியவை வருமாறு,
” 1977 இல் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோல்வியை தழுவியது. எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். அதன்பின்னர் கட்சி மீண்டெழுந்தது. தற்போது 14 உறுப்பினர்கள் இருக்கின்றோம். 77 ஐவிட சிறந்த நிலையில் உள்ளோம். எனவே, சுதந்திரக்கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும்.
நல்லாட்சியின்போது பல திட்டங்களை முன்னெடுத்தோம். சேவைகளை செய்தோம். தற்போதுபோல அமைச்சுகளின் செயலாளர்கள் பதவி விலகவில்லை. விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக அமைச்சு பதவிகள் பறிக்கப்படவில்லை. ” – என்றார் மைத்திரி.
