சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காலை 09.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்தவகையில் ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் பலர் கலந்துகொண்டு, நினைவுகூர்ந்தனர்.
க.கிசாந்தன்
