சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 3,906 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles