ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்பதாக உறுதியளித்தனர் .
