சூர்யகுமார் யாதவ் அதிரடி: மும்பை அணி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோஹ்லி 3 ஓட்டங்களுடனும், அடுத்ததாக களமிறங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் – டு பிளிஸ்சிஸ் சிறப்பான இணைப்பாட்டம்மூலம் அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ் 61 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 197 ஓட்டங்கள் இலக்குடன் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில் இஷான் கிஷன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 34 பந்துகளில் 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 38 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்ய குமாருடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 19 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 21 (6) ரன்களும், திலக் வர்மா 16 (10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles