சூழ்ச்சிமூலம் பிரதமராவது ரணிலுக்கு கைவந்த கலை – பதறுகிறார் காமினி லொக்குகே

” சூழ்ச்சி நடவடிக்கைமூலம் பிரதமர் பதவிக்கு வருவது ரணிலுக்கு கைவந்த கலை. எனினும், அவருக்கு நாம் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம்.” – என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

“தேசிய அரசு அமைக்கப்பட்டு, பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.” என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” எவராவது ரணிலின் ஜோதிடத்தை பார்த்திருப்பார்கள் போலும். அவரை பிரதமர் ஆக்க நாம் தயார் இல்லை. எப்போதுமே அவர் குறுக்கு வழியில்தான் அந்த பதவிக்கு வந்துள்ளார்.” – என்றார் காமினி லொக்குகே.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

Related Articles

Latest Articles