யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வு தாமதிக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதிவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியைப் பார்வையிட்டனர்.
இதன்போது, அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கபப்ட்டது.
இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவால் புதைகுழி அகழ்வுக்குக் கோரப்பட்ட நிதி, நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அதற்கான தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.