பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ணமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரி இஷாரா செவ்வந்தியை மறைத்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றசமயம் அதற்கு முன்பு சில நாள்கள் மறைந்திருக்க இடம் வழங்கிய குற்றச்சாட்டிலேயேஅவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச்சேர்ந்த ஓர் அரச உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.