ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) 2021 ஜனவரி ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர் 2021 பெப்ரவரியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேலேயே அதற்கு முன்னதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வருகிறார். எனவே, அவரின் பயணம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

Related Articles

Latest Articles