பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். எந்த மோசடி வேலைகளிலும் தாம் ஈடுபடவில்லையென அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
