ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர், எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடன் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது, தேசிய மக்கள் சக்தி அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்கவுள்ளது.
எனினும், தமது கட்சி வேட்பாளரை நிறுத்துமா அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என்பது தொடர்பில் மொட்டு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளார், அவர் நாடு திரும்பிய பின்னர் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார். அந்த கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டு கட்சியின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles