ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
17 ஆம் திகதிவரை டில்லியில் தங்கி இருக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி நிதி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர்.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இவ்விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
