ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றை பல்கலைக்கழகங்களாக மாற்றுவேன் – சஜித்

“ அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஏனைய கட்சித் தலைவர்கள் 2024 இல் கூட மக்களை ஏமாற்றி, மாளிகை அரசியலில் ஈடுபட்டு – அரச மாளிகைகளில் சொகுசுகளை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்,நாட்டின் மாளிகைகள் நவீன தொழில்நுட்பம், ஆங்கிலம் என்பன கற்பிக்கும் பெரிய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். எனவே,மாளிகைகள் பற்றிய கனவுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மொழியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் காலத்தை நிறுத்த வேண்டும். நாட்டிலுள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உயர் ஆங்கில மொழிக் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இனம்,மதம், சாதி,குல பேதங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் கோஷங்களுக்கு பணயக்கைதிகளாக இருக்க வேண்டாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles