ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்கு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாஸா விவகாரம் இதில் தாக்கத்தை செலுத்தாது எனவும், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் கூறிய கருத்து உண்மையே. நிபுணர் குழுவின் பரிந்துரையையே அது தெரியப்படுத்தினார். இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
