‘ஜெனிவா சமரில் ‘அடுத்து என்ன? வெளிவிவகார அமைச்சர் இன்று விசேட உரை!

ஜெனிவா விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (25) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். இந்த தகவலை அவர் நேற்று உறுதிப்படுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் எதிர்காலத்தில் இலங்கையால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மேற்படி உரையின்போது வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவு வழங்கின. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. 14 நாடுகள் நிடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ள நிலையில், அதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிப்பார் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles