ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, வெளிவிவகார அமைச்சரின் உரை உட்பட ஜெனிவா விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எனினும், இதற்கு அரச தரப்பில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படக்கூடும் எனவும், இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் எனவும் தெரியவருகின்றது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விவாதத்துக்கான நேரம் ஒதுக்கப்படும்.
அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலும் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.