ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் பலி!

 

இஸ்ரேலின் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர்.

கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது.

பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர்.

இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் வைத்தியசாலையில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து இந்த தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் பாலஸ்​தீனத்​தின் மேற்கு கரை பகு​தியை சேர்ந்​தவர்​கள். பாது​காப்பு படை​யினர் நடத்​திய எதிர்​ தாக்​குதலில் தீவிர​வா​தி​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர்.

இஸ்​ரேலிய பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்​ஸ், பாலஸ்​தீன தீவிர​வாத அமைப்​பான ஹமாஸ{க்கு ஆயுதங்​களைக் கைவிட்டு சரணடை​யு​மாறும், இல்​லை​யென்​றால் ஹமாஸ் அழிக்​கப்​படும் என்றும் இறுதி எச்​சரிக்கை விடுத்த சில மணி நேரங்​களில் இந்த தாக்​குதல்​ நடை​பெற்​றுள்​ளது.

அதேவேளை, இத்தாக்குதலை ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

Related Articles

Latest Articles