டிக்கோயாவில் 20 பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து

டிக்கோயா அளுத்தகல பகுதியில் இன்று (27) காலை ஆட்டோவொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், ஆட்டோ ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து டிக்கோயாவை நோக்கி வந்த ஆட்டோவே, அதிக வேகம் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles