டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், ஜனாதிபதிக்குள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் நீதிமன்றம் அவரைக் கடிந்துள்ளது.
ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு கொள்கையால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. இந்நிலையில் சீனாவைத் தவிர பிற உலக நாடுகளுக்கு இறக்குமதி வரி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. 10 சதவீத வரி மட்டுமே அமுலில் இருந்தது.
இந்நிலையில் ட்ரம்ப் வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ட்ரம்ப் வரி விதிப்புக்கு தடை விதித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.