முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.










