தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 445 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் நேற்றுவரை 1,445 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.










