தனி விமானத்தில் இலங்கை வந்தார் சுப்ரமணியன் சுவாமி!

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தனி விமானத்தில் இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர், சுப்ரமணியம் சுவாமியை வரவேற்றனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்றுமாலை நடைபெறும் நவராத்திரி விழாவிலும் சுப்ரமணியன் சுவாமி கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன்இ இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கொன்றிலும் அவர் உரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles